search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    • திருவெண்ணை நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூரை அடுத்த மண்டகமேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49), இளந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர்கள் 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×