என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளி கொலையில் 2 பேர் கைது
- மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் அலெக்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
- முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அலெக்ஸ் என்ற சில்லி(வயது 28). உப்பள தொழிலாளி.
வெட்டிக்கொலை
இவர் நேற்று முத்தையாபுரம் தேவி நகரை சேர்ந்த தனது நண்பரான மகேஷ் வீட்டில் வைத்து நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் அலெக்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேசின் சகோதரரான ரமேஷ் என்பவரை கடந்த ஆண்டு அலெக்ஸ் கத்தியால் குத்தியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணை
அந்த முன்விரோதத்தில் மகேஷ் எப்படியாவது அலெக்சை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதும், அதன்படி நேற்று தனது வீட்டுக்கு மது குடிக்க அழைத்து வந்ததும் தெரியவந்தது.
அங்கு அலெக்சை அதிக அளவு மதுகுடிக்க வைத்து பின்னர் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்