search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் அடுத்தடுத்து 2 விபத்துகள்
    X

    சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் அடுத்தடுத்து 2 விபத்துகள்

    • எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தி வருகின்றனர்
    • திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

    சூலூர்,

    சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை இரண்டாக பிரிக்க நடுவில் தடை கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை கற்களுக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் அந்த வழியே வந்த கார் ஒன்று மற்றொரு காரை முந்தியபோது இந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இன்ப துரைராஜ் என்பவருக்கும் அவருடன் வந்த மற்றொருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல மேலும் ஒரு கார் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இப்பகுதியில் குறுகிய காலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதே இடத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. நெடுஞ்சாலை துறையினர் சாலை தடுப்பு அருகே போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் அல்லது பால வேலை நடைபெறும் இடம் வரை சாலை தடுப்பு கற்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் சாலையின் மத்தியில் சாலை தடுப்பு கற்களை முழுவதுமாக வைத்தனர். மேலும் அதன் மீது ஒளிரும் பட்டைகளையும் ஒட்டினர்.

    Next Story
    ×