என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 கல்லூரி மாணவிகள் மாயம்
- சம்பவத்தன்று மாலை மாணவி விடுதியில் இருந்து வெளியே சென்றார்.
- கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை.
கன்னியாகுமரி மாவட்டம் எடக்காட்டை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கோவையில் விடுதியில் தங்கி பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை மாணவ விடுதியில் இருந்து வெளியே சென்றார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை.
இதுதொடர்பாக அவர்களது பெற்றோரை தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் வரவில்லை என தெரிவிக்கவே கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை பி.என்.பாளையம், ஜோதி நகரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் ரேஸ்கோர்சில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்தாக புறப்பட்டு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






