search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில் கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது
    X

    திட்டக்குடியில் கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது

    • இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளனர்.
    • 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தக்காளி திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது திட்டக்குடியில் ராமநத்தம் - விருத்தாச்சலம் மாநில சாலையோரம் உள்ள பன்னீர் முட்டை கடையில் இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் உள்ள 4 ஆயிரம் பணத்தை எடுப்பதும் மற்றும் பொருள்கள் எடுக்கும் காட்சிகள் அங்குள்ளசி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சிறுவன், கோழியூரை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

    Next Story
    ×