search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ரவுடி உள்பட 2 கைது
    X

    தூத்துக்குடியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ரவுடி உள்பட 2 கைது

    • ராஜா டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • காயம் அடைந்த ராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து சோரீஸ்புரம் பேச்சியம்மன் கோவில் அருகில் நடந்து வரும் போது அவரை வழிமறித்த தூத்துக்குடி தெற்கு சங்கரபேரியை சேர்ந்த லாரி டிரைவர் வெற்றிவேல் முருகன்( 35) மற்றும் உத்தண்டு ராஜ் (21) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

    அதற்கு அவர் மறுக்கவே 2 பேரும் அரிவாளால் ராஜாவை வெட்டினார்கள். இதில் காயம் அடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெற்றிவேல் முருகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×