search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மூதாட்டியை மிரட்டிய 2 பேர் கைது
    X

    கோவையில் மூதாட்டியை மிரட்டிய 2 பேர் கைது

    • 2 சிறுமிகளை, சிறுவன் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார்.
    • மூதாட்டியை சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து மிரட்டினார்.

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த 2 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது கெம்பட்டி காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் தினசரி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சிறுமிகள் தனது பாட்டியிடம் கூறினர். அவர் சிறுவனை கண்டித்தார். சம்பவத்தன்று சிறுமிகள் தனது பாட்டியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலை சிறுமியின் வீட்டுக்கு வந்த சிறுவன் உட்பட 2 பேர் வீட்டு காலிங் பெல்லை நிறுத்தாமல் அழுத்தி தொல்லை கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த சிறுமியின் பாட்டியை 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர். இது குறித்து சிறுமிகளின் பாட்டி பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாது. புகாரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கெம்பட்டி காலனி பாளையம்தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் உப்புமண்டி பகுதியை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி சிவக்குமார்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போட்டியில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×