search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    செஞ்சி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.
    • அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட தனிபிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    மேற்படி அவர்கள் செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 27), கவரை கிராமத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் மகன் தருண்குமார்(20) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×