search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 190 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 190 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.
    • அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    கோவை

    பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.

    இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-கோவை காந்திபுரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் பகுதிக்கும். சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்களும் இயக்கப்படுகிறது.

    உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பஸ்களும், சேலம் மற்றும் திருச்சிக்கு 50 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்களும் என 190 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×