என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
- சம்பவத்தன்று மாலையில் சாந்தி வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றார்.
- சாந்தி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சுங்கம் பைபாஸ் ரோடு, சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். வக்கீல். இவரது மனைவி சாந்தி (வயது 58).
சம்பவத்தன்று மாலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம், 1 ஜோடி வெள்ளி தோடு, வெள்ளி செயின், வெளி நாட்டு பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






