search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்   தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்ற  16 பேர் கைது
    X

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்ற 16 பேர் கைது

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்யாத வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×