என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்திய 140 பேர் கைது- டி.ஜி.பி. தகவல்
- கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்க ள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
தஞ்சாவூர்:
தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.ஜி.பி. வன்னியப்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
எனது உத்தரவின்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் , அரியலூர், மயிலாடு துறை ஆகிய மாவட்ட ங்களில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆகஸ்ட் 13ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா சின்னவளையம் மேம்பாலம் அருகே லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1300 கிலோ ரேஷன் அரிசியும், 16ஆம் தேதி திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 1800 கிலோ ரேஷன் அரிசியும், 22 ஆம் தேதி திருச்சி லால்குடி பகுதியில் 1050 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 ஆம் தேதி திருச்சி மணப்பாறை ஆனம்பட்டி பகுதியில் ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியும், 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வெட்டன்விடுதி சாலையில் புதுபட்டி கடைவீதி அருகே நான்கு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1650 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மாதம் செப்டம்பர் 4ஆம் தேதி திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
இதுவரை கடத்தலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 வாகனங்க ள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குடிமை பொருள் கடத்தல் தொடர்பான தகவல் பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 599 5950 தலைமை இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரம் கட்டுப்பாட்டறை இயங்கி வருகிறது.
இதனால் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வாரம் தோறும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருச்சி மண்ட லத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மேற்படி கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்