search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் கடைக்கு சென்ற 14 வயது சிறுமி கடத்தல்
    X

    மேட்டுப்பாளையத்தில் கடைக்கு சென்ற 14 வயது சிறுமி கடத்தல்

    • வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.
    • சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது 14 வயது மகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் குரும்பனூரில் தங்கி இருந்து பாக்கு உறிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது.சம்பவத்தன்று சிறுமி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரை அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. தற்போது போலீசார் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×