search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 13 பேர் கைது
    X

    நாங்குநேரி அருகே லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 13 பேர் கைது

    • பட்டர்புரம் விலக்கில் நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
    • கஞ்சா விற்பனை செய்த ரீகன், உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் விலக்கில் ஒரு கும்பல் லாரியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக நாங்குநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர். அதில் லாரியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த ரீகன், தூத்துக்குடி ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த ராஜதுரை, மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்ற லெப்ட் செல்வம், கோபி, சிவசுப்பு என்ற சிவா, தூத்துக்குடி லீவிபுரத்தை சேர்ந்த முத்து, நாங்குநேரியை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்யாணி, தென்னிமலையை சேர்ந்த இசக்கிப்பாண்டி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த பாவன்பவிகானா, ராமுடூ, மேலப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அனிதா ஆகிய 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள கஞ்சாவும், லாரியும் பறிமுதல் செய்யப் பட்டது.

    Next Story
    ×