என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலை
- உடனடியாக தரனீஷை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கோமங்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குண்டலாபட்டியை சேர்ந்தவர் அய்யாசாமி.
இவரது மகன் தரனீஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தரனீஷ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார்.
இதனையடுத்து அய்யாசாமி அவரது மகனுக்கு பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதன் காரணமாக தரனீஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தரனீஷை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தரனீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோமங்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






