search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளியில் பாலியல் தொல்லை 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி  அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளியில் பாலியல் தொல்லை 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது

    • மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது.
    • மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் அறிவியல் ஆசிரியர் பாலி யல் தொல்லையில் ஈடுபட்ட தால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று ள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விநாயகபுரம் கொழை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 55). இவர் அங்குள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளியில் உள்ள ஆய்வக த்தில் இருந்தபோது, 10-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது டைய மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவியிடம் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஏன் என்னுடன் சரியாக பேசு வதில்லை என்று கூறி, மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மாணவி விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த மாணவியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மாணவியின் தாய் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தமிழ்ச்செல்வனை ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர்கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×