search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் 10 பேர் கைது
    X

    குண்டர் சட்டத்தில் 10 பேர் கைது

    • வடகரையை சேர்ந்த உமாமகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரி வடகரையை சேர்ந்தவர் உமாமகேஸ்வரன் (வயது 24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி உமாமகேஸ்வரை போலீசர் குண்டல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

    இதேப்போல் சேவப்பநாயக்கன்வாரியை ேசர்ந்த அருண் (25), நடராஜன் (21), சக்தி (20), தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை நடராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிபிச்சை (35), சீனிவாசபுரம் செக்கடி ரோட்ட சேர்ந்த மணிகண்டன் (35), தினேஷ் (24), விஜய் (30), கார்த்திக் (20), அஜித் (24) ஆகிய 9 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×