search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவலாஞ்சியில் 10 செ.மீ மழை
    X

    அவலாஞ்சியில் 10 செ.மீ மழை

    • 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. 5-வது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் அடிப்பதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    இது தவிர பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- அவலாஞ்சி-106, அப்பர் பவானி-105, பந்தலூர்-98.2, சேரங்கோடு-96, தேவலா-64, கூடலூர்-58, குந்தா-51, அப்பர் கூடலூர்-42. பாடந்தொரை-44, பாலகொலா-38.

    Next Story
    ×