என் மலர்
செய்திகள்

டாடா 45X இந்திய வெளியீட்டு விவரங்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் 45X மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. #TataMotors
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான 45X காரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த கார் 2019 பண்டிகை காலத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் டாடா 45X கான்செப்ட் மாடல் எதிர்கால வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா 45X மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் ஹூன்டாய் எலைட் i20 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ஃபா என டாடா மோட்டார்ஸ் அழைக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட மாட்யூலர் பிளாட்ஃபார்ம் சார்ந்து டாடா 45X உருவாக்கப்படுகிறது. டாடா நெக்சானில் வழங்கப்பட்டு இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களே புதிய மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் டாடா 45X மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 170 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும். இதன் டீசல் வேரியன்ட் 1.5 லிட்டர் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 260 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என்றும் டாடா 45X மாடல் இந்திய சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 6-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
டாடா 45X மாடலின் உள்புறம் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் இருக்கைகளில் உயர் ரக லெதர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளுடன் சந்தையில் நிலவும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story






