என் மலர்
செய்திகள்

பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்: ஹோன்டா திட்டம்
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து, பின் எலெக்ட்ரிக் வாகனங்களாக அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கென எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான யுக்தியை ஹோன்டா நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் அதிகப்படியான மாடல்கள் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று மஹேந்திரா மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியுள்ளது.

ஹைப்ரிட் மாடல்களை் இல்லாமல் ஹூன்டாய் நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் பல்வேறு முன்னேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஹோன்டா நிறுவனம் போட்டியில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தளம் உருவான பின்பே ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும், அதுவரை ஹைப்ரிட் மாடல்களை வெளியிடும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜாஸ் மற்றும் சிட்டி மாடல்களின் ஹைப்ரிட் வாகனங்களை ஹோன்டா வெளியிட இருக்கிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 6 புதிய ஹோன்டா கார்களை வெளியிட இருக்கிறது.
இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட ஹோன்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து, பின் எலெக்ட்ரிக் வாகனங்களாக அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கென எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான யுக்தியை ஹோன்டா நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் அதிகப்படியான மாடல்கள் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று மஹேந்திரா மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியுள்ளது.

ஹைப்ரிட் மாடல்களை் இல்லாமல் ஹூன்டாய் நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் பல்வேறு முன்னேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஹோன்டா நிறுவனம் போட்டியில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தளம் உருவான பின்பே ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும், அதுவரை ஹைப்ரிட் மாடல்களை வெளியிடும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜாஸ் மற்றும் சிட்டி மாடல்களின் ஹைப்ரிட் வாகனங்களை ஹோன்டா வெளியிட இருக்கிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 6 புதிய ஹோன்டா கார்களை வெளியிட இருக்கிறது.
Next Story






