என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு: உபெர் மற்றும் மஹேந்திரா இடையே ஒப்பந்தம்
By
மாலை மலர்25 Nov 2017 9:06 AM GMT (Updated: 25 Nov 2017 9:30 AM GMT)

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஐதராபாத் மற்றும் புதுடெல்லியில் உள்ள தயாரிப்பு ஆலைகளில் தயாரிக்கப்பட இருக்கிறது.
முதற்கட்ட பணிகளை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் கீழ் 1900 கோடியில் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உபெர் தளத்தில் இந்தியா முழுக்க இயக்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா நிறுவனத்தின் e2oபிளஸ் ஹேட்ச் மற்று்ம இவெரிடோ செடான் உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் பதிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன. உபெர் ஓட்டுநர்கள் மஹேந்திரா எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலை, கவர்ச்சிகர நிதியுதவி மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றில் பெற முடியும்.

இத்துடன் நகரங்களில் பொது பயன்பாடுகளுக்கு என கட்டமைக்கப்பட இருக்கும் சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மஹேந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்ற இருக்கிறது. மஹேந்திரா சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென ஓட்டுநர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா மட்டுமின்றி ஈச்சர் மோட்டார்ஸ், வால்வோ, மாருதி சுசுகி என பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக ஈச்சர் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்து ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்களிடையே கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஐதராபாத் மற்றும் புதுடெல்லியில் உள்ள தயாரிப்பு ஆலைகளில் தயாரிக்கப்பட இருக்கிறது.
முதற்கட்ட பணிகளை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபெர் மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் கீழ் 1900 கோடியில் மஹேந்திராவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உபெர் தளத்தில் இந்தியா முழுக்க இயக்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா நிறுவனத்தின் e2oபிளஸ் ஹேட்ச் மற்று்ம இவெரிடோ செடான் உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் பதிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன. உபெர் ஓட்டுநர்கள் மஹேந்திரா எலெக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலை, கவர்ச்சிகர நிதியுதவி மற்றும் காப்பீடு உள்ளிட்டவற்றில் பெற முடியும்.

இத்துடன் நகரங்களில் பொது பயன்பாடுகளுக்கு என கட்டமைக்கப்பட இருக்கும் சார்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மஹேந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்ற இருக்கிறது. மஹேந்திரா சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென ஓட்டுநர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கப்பட இருக்கிறது.
மஹேந்திரா மட்டுமின்றி ஈச்சர் மோட்டார்ஸ், வால்வோ, மாருதி சுசுகி என பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக ஈச்சர் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்து ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
