search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி.
    X
    சென்னிமலையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி.

    நான் கலைஞரின் பேரன் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்- உதயநிதி ஸ்டாலின்

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    கொளுத்துகிற வெயிலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு அன்போடு எழுச்சியுடன் இவ்வளவு பேர் காத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அத்தனை பேரும் ஏற்கனவே முடிவு செய்து விட்டீர்கள் சரியா? காங்கயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சாமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. நான் இன்றைக்கு வந்து உங்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அடுத்த தொகுதிக்கு சென்று விடுவேன். அடுத்த 7 நாட்கள் நீங்கள் தான் இங்கு ஒவ்வொருவரும் இதே உணர்வோடு இதே எழுச்சியோடு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்க வேண்டும்.

    நான் நேற்று எடப்பாடிக்கு சென்று நமது வேட்பாளர் சம்பத்துக்கு பிரசாரத்துக்கு சென்று விட்டு வந்தேன். எடப்பாடி தொகுதியிலே தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தோற்கப்போவது உறுதி. தோற்கப்போவது மட்டுமல்ல தோற்று உள்ளே போவதும் உறுதி. தலைவர் முடிவு செய்வார். பாளையங்கோட்டையா, புழலா என்று முடிவு செய்வார்.

    நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கொடுத்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா. அதைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி வெற்றி பெற்றார். இந்தியாவில் மோடி அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் என்ன ஜெயித்தார்கள் முட்டை. இப்போது அதே முட்டையை நாமத்தை திருப்பி மோடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நீங்கள் போட வேண்டும். செய்வீர்களா?

    எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் மோடியிடமும் டெல்லியிடமும் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார். கொஞ்சம் விட்டால் தமிழ்நாட்டை மோடியிடம் விற்று விடுவார். 5 நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் கருத்து கணிப்பு போட்டார்கள். அதில் தி.மு.க. குறைந்தது 180 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகும் என்று சொன்னார்கள். 180 போதுமா? 180 எல்லாம் பத்தாது குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியையும் அந்த கொள்ளைக்கார கும்பலையும் அடிமைக் கூட்டத்தையும் ஓட ஒட அடித்து விரட்ட வேண்டும். செய்வீர்களா? நிச்சயமாக செய்வீர்களா? மோடி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேலை பார்த்தார். அதை நீங்கள் எல்லாம் மறந்து இருக்க மாட்டீர்கள்.

    நவம்பர் மாதம் நள்ளிரவில் 11 மணிக்கு எழுந்து 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் செல்லாது என்று சொன்னார் ஞாபகம் இருக்கிறதா? லட்சக்கணக்கான மக்கள் ஏ.டி.எம் வாசலில் நின்று இறந்தே விட்டார்கள்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தூக்கி கொண்டு வந்து விட்டேன். கடந்த 5 நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அதை திருப்பி கொண்டு கொடுத்து விடுகிறேன்.

    நேற்று மோடி தாராபுரத்தில் என்னை பற்றி பேசி உள்ளார். உதயநிதி குறுக்கு வழியில் வருகிறார் என்று. நானா குறுக்கு வழியில் வந்தேன். மோடி அவர்களே உங்களைப் பார்த்து பயப்படுவதற்கு உங்களைப் பார்த்து கூளைக்கும்பிடு போடுவதற்கு நான் எடப்பாடி பழனிசாமி கிடையாது. நான் உதயநிதி ஸ்டாலின். கலைஞரின் பேரன். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். 10 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனை காணவில்லை என்று சொல்லி வருகிறேன். அதற்கு பதில் சொல்ல திராணியில்லை. நீங்கள் யார் யாரையெல்லாம் முந்திக் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லவா. இரட்டை இலைக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு விழும் ஓட்டு. 234 தொகுதியிலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் வேட்பாளர். அந்த உணர்வோடு பிரசாரம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினர் வந்து ஓட்டு கேட்டால் உங்கள் அம்மா எப்படி இறந்தார் என்று கேளுங்கள். யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவை பார்க்க தீபா, தீபக் சென்றார்கள். யாரையும் உள்ளே விடவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து பேட்டி கொடுத்தார்கள். அம்மா இன்றைக்கு இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், உப்மா சாப்பிட்டார். அப்பல்லோவில் இதற்கு ரூ.100 கோடி பில் போட்டார்கள். கடைசியில் ஒரு அமைச்சர் அம்மா இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு அமைச்சர் உள்ளார். தேங்காய் சீனிவாசன் காமெடி நடிகர். திண்டுக்கல் சீனிவாசன் காமெடி அமைச்சர். இப்போது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். 80 நாளும் அம்மாவை பார்க்கவே இல்லை என்று மன்னிப்பு கேட்கிறார். மன்னித்து விடுவீர்களா? மன்னிக்க மாட்டோம். ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைவர் கூறி உள்ளார். அனைத்திலும் ஊழல். எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் கம்பி எண்ணப்போவது உறுதி. அதற்கு நீங்கள் அனைவரும் 6-ந்தேதி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×