என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து ராஜ்நாத்சிங் இன்று ஊட்டியில் பிரசாரம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் வரும் அவர் கோவை விமான நிலையம் வந்திறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் ஊட்டி சென்றடைகிறார்.
ஊட்டி கேசினோ சந்திப்பில் இருந்து ரோடு ஷோவாக சென்று வாக்கு சேகரிக்கும் ராஜ்நாத் சிங், கமர்சியல் சாலை, மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி. திடலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நிகழ்ச்சி நடக்கும் ஏ.டி.சி. மைதானம் பகுதி மற்றும் நகரில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






