என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... வேலூரில் குடுகுடுப்பைகாரர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நாட்டுப்புற நடனம் ஆடி 100 சதவீத வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குடுகுடுப்பைக்காரர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குடுகுடுப்பைக்காரர் ஒருவர் ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா... நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது... ஏப்ரல் 6-ந்தேதி எல்லாரும் ஓட்டு போடுங்க.
முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார்.
இந்த நிகழ்ச்சி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் கல்லூரி வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்கு என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






