என் மலர்
கதம்பம்

மகாலட்சுமி
மகாலட்சுமி உங்கள் வீட்டில் தங்க என்ன செய்ய வேண்டும்?
அமைதியின் ஸ்வரூபத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.
நம்முடைய வீட்டில் குபேரரின் அருளும், மகாலட்சுமியின் அருளும் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் பலவகைப்பட்ட ஊறுகாய்களை குறைவில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பத்து பேர் இருக்கும் வீட்டில் பல வகையான ஊறுகாய்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டு பேர், மூன்று பேர் உள்ளவர்களது வீட்டில் இதற்கு சாத்தியமில்லை. உங்களால் முடிந்தவரை கட்டாயம் நெல்லிக்காய் ஊறுகாய் உங்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த மகாலட்சுமியின் ஆசி இருந்தால் தான் உங்கள் வீட்டில் இந்த நெல்லிகாய் ஊறுகாய் இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக உங்களது வீட்டின் அருகில் கோவில்களில் வில்வமரம் இருந்தால் அதை திங்கட்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் தோறும் தவறாமல் ஐந்து முறை சுற்றி வர வேண்டும். உங்களால் முடிந்தால் 21 முறை சுற்றுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது அந்த வில்வமரத்தை வலம் வருவது என்பது மிகவும் உத்தமமான ஒன்று. இந்த பாக்கியமும் அனைவருக்கும் கிடைத்து விடாது. யாருக்கு இறைவனின் ஆசீர்வாதம் உண்டோ அவர்களால்தான் இப்படிப்பட்ட பலனை எல்லாம் பெற முடியும். ஏனென்றால் எல்லோரது வீட்டின் அருகில் இருக்கும் கோவிலிலும் வில்வமரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். முடிந்தவரை இதை பின்பற்றுவது மிகவும் சிறப்பான ஒன்று.
அடுத்ததாக வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற பட்டு துணியை அணிந்து கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாதாரண உடையை அணிந்தால் அது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் தான் நடைபெற்றுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள்.
மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் நடக்கின்ற நடையை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பாதங்களை நாம் எடுத்து வைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. சிலர் பூமாதேவியை அதிரும் அளவிற்கு ‘தொம் தொம்’ என்று நடப்பார்கள். பிறகு கால்களை தரையோடு தேய்த்துக்கொண்டே நடப்பார்கள். இது இரண்டுமே தரித்திரத்தை உண்டாக்கும் என்று மறந்து விடாதீர்கள். பொறுமையாக நடப்பதே மகாலட்சுமியின் அம்சம்.
இறுதியாக மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் சத்தம்போட்டு பேசவே மாட்டார்கள். அமைதியின் ஸ்வரூபத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.
நெல்லிக்காய் ஊறுகாய், மஞ்சள் வண்ண பட்டு, வில்வமரம், அமைதியான நடை, சாந்தம் இவை ஐந்தையும் எவரொருவர் பின்பற்றுகிறாரோ, அவர்களிடம் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள் என்பதுதான் அர்த்தம்.
இந்தக் காலகட்டத்தில் பத்து பேர் இருக்கும் வீட்டில் பல வகையான ஊறுகாய்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டு பேர், மூன்று பேர் உள்ளவர்களது வீட்டில் இதற்கு சாத்தியமில்லை. உங்களால் முடிந்தவரை கட்டாயம் நெல்லிக்காய் ஊறுகாய் உங்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த மகாலட்சுமியின் ஆசி இருந்தால் தான் உங்கள் வீட்டில் இந்த நெல்லிகாய் ஊறுகாய் இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக உங்களது வீட்டின் அருகில் கோவில்களில் வில்வமரம் இருந்தால் அதை திங்கட்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வாரம் தோறும் தவறாமல் ஐந்து முறை சுற்றி வர வேண்டும். உங்களால் முடிந்தால் 21 முறை சுற்றுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது அந்த வில்வமரத்தை வலம் வருவது என்பது மிகவும் உத்தமமான ஒன்று. இந்த பாக்கியமும் அனைவருக்கும் கிடைத்து விடாது. யாருக்கு இறைவனின் ஆசீர்வாதம் உண்டோ அவர்களால்தான் இப்படிப்பட்ட பலனை எல்லாம் பெற முடியும். ஏனென்றால் எல்லோரது வீட்டின் அருகில் இருக்கும் கோவிலிலும் வில்வமரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். முடிந்தவரை இதை பின்பற்றுவது மிகவும் சிறப்பான ஒன்று.
அடுத்ததாக வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற பட்டு துணியை அணிந்து கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாதாரண உடையை அணிந்தால் அது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் தான் நடைபெற்றுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள்.
மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் நடக்கின்ற நடையை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பாதங்களை நாம் எடுத்து வைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. சிலர் பூமாதேவியை அதிரும் அளவிற்கு ‘தொம் தொம்’ என்று நடப்பார்கள். பிறகு கால்களை தரையோடு தேய்த்துக்கொண்டே நடப்பார்கள். இது இரண்டுமே தரித்திரத்தை உண்டாக்கும் என்று மறந்து விடாதீர்கள். பொறுமையாக நடப்பதே மகாலட்சுமியின் அம்சம்.
இறுதியாக மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் சத்தம்போட்டு பேசவே மாட்டார்கள். அமைதியின் ஸ்வரூபத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.
நெல்லிக்காய் ஊறுகாய், மஞ்சள் வண்ண பட்டு, வில்வமரம், அமைதியான நடை, சாந்தம் இவை ஐந்தையும் எவரொருவர் பின்பற்றுகிறாரோ, அவர்களிடம் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள் என்பதுதான் அர்த்தம்.
அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்
Next Story






