search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி கல்வித்துறையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    பள்ளி கல்வித்துறையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாவட்டத்தில் அளவான குடும்பத்தை வைத்து வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக மருத்துவ துறையை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கி உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி கூடங்களில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றி அமைக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிகளை காண மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

    அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகமாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. பள்ளியை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு நிதி வழங்கப்பட உள்ளது.


    கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி இதுவரை ரூ.69 லட்சம் வரை வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    Next Story
    ×