என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களின் கஷ்டங்கள் பிரதமருக்கு தெரிவதில்லை- வைகோ
    X

    மக்களின் கஷ்டங்கள் பிரதமருக்கு தெரிவதில்லை- வைகோ

    உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் அறிவிப்பினை ஏற்று தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடக அரசுக்கு இருக்கிறது. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.



    ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #MDMK #Vaiko
    Next Story
    ×