என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த கட்சி: ஓ.எஸ்.மணியன் பேச்சு
    X

    அ.தி.மு.க. தொண்டர்களால் வளர்ந்த கட்சி: ஓ.எஸ்.மணியன் பேச்சு

    தொண்டர்களால் உருவான கட்சி அதிமுகதான் என்று மயிலாடுதுறையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது.

    நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ராஜேந்திரன், தமிழரசன், நகர அவைத்தலைவர் அலி, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் உமாச்சந்திரன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி, சிறப்பு பேச்சாளர்கள் மூர்த்தி, கவுரிசங்கரன், மணவை மாறன் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

    தொண்டர்களால் உருவான கட்சி அதிமுகதான். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்துவந்து தனியாக அ.தி.மு.க. கட்சியை தொடங்கிய 6 மாதத்திலேயே திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடித்தவர். எம்.ஜி.ஆர். மட்டும்தான் தனது கட்சியை வளர்த்ததோடு எதிர் கட்சியான தி.மு.க.வையும் வளர்த்தார். அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பின்பு எப்படியாவது ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக வரமுடியாது. தி.மு.க எம்.எல்.ஏ.க்களே அ.தி.மு.க. ஆட்சி தொடரட்டும். ஆட்சியை கலைத்தால் எங்களுக்கு மீண்டும் சீட் வேண்டுமென்றால் அதற்கும் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று புலம்புகின்றனர்.


    இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டும் கடும் வறட்சி ஏற்பட்டாலும் விவசாயிகளையும். ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வறட்சி நிவாரணங்களை வழங்கி உள்ளார். பயிர்காப்பீட்டுத் தொகை பாதி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியும் விரைவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் காளியம்மாள், நகர துணைச் செயலாளர் கார்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர். 9வது வார்டு கழக செயலாளர் ராமு நன்றி கூறினார்.

    Next Story
    ×