என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்மா வெங்கட்ராமனுக்கு ‘அவ்வையார்’ விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Byமாலை மலர்2 May 2017 6:55 AM GMT (Updated: 2 May 2017 6:55 AM GMT)
தலைமைச் செயலகத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு ‘அவ்வையார்’ விருதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தொண்டாற்றி வரும், சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட் ராமனின் சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2017ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அவ்வையார் விருதினை பெற்றுக்கொண்ட பத்மா வெங்கட்ராமன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், சமூகநல இயக்குநர் அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்விற்கு தொண்டாற்றி வரும், சென்னை, அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட் ராமனின் சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2017ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
பத்மா வெங்கட்ராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அவ்வையார் விருதினை பெற்றுக்கொண்ட பத்மா வெங்கட்ராமன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், சமூகநல இயக்குநர் அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X