search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பமடைவதை தடுக்கும் காசநோய்
    X
    கர்ப்பமடைவதை தடுக்கும் காசநோய்

    காசநோய் இருந்தால் கர்ப்பமடைய முடியாதா?

    இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
    காசநோய் அல்லது டிபி (TB) எனும் நோயானது உலகில் தற்பொழுது பரவலாக காணப்படும் ஒரு நோய். உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் தொற்று ஏற்படுகிறது. இந்த காசநோய் உருவாக காரணமாக இருப்பது டியூபர்குளோசிஸ் என்ற ஒரு பாக்டீரியம் ஆகும். பொதுவாக இந்த பாக்டீரியமானது உடலின் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலை முக்கியமாக பாதிக்கிறது.

    பின்பு ரத்த ஓட்டத்தில் இந்த பாக்டீரியம் கலப்பதன் மூலம் உடலின் பிற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் உறுப்புகளில் மிக முக்கியமாக இருப்பது கருப்பை மற்றும் கருக்குழாய். இந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

    ஆனால் இந்த நோயானது மூச்சுக்குழலை தவிர தண்டுவடம், குடல், நிணநீர் தட்டுகள் மற்றும் தோலினை பாதிக்கிறது. அதே சமயத்தில், கருப்பையும் கருக்குழாயும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெரும் 1-2 சதவீத பெண்களுக்கு கருப்பை காசநோய் இருக்கிறது.

    இந்த காசநோயின் மிகப்பெரிய சவால் என்ன வென்றால், முதலில், நிறைய நாட்களுக்கு எந்தவொரு அறிகுறியும் தெரியாது. ஆனால் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் பொழுது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருண்டு விடுவதாக, ஐவிஎஃப் மற்றும் இனப்பெருக்க அறுவை சிகிச்சை ஆலோசகர் கூறுகிறார். இந்த கருக்குழாய் பாதிப்படைவதால் விந்து இயற்கையாக கருக்குழாயை கடந்து சென்று கரு முட்டையை அடைய முடியாததால் மலட்டுத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.

    காசநோயால் சேதமடைந்த கருப்பைகளில் சீழ் நிரப்பப்பட்ட நீர்கட்டிகள் உருவாவதன் மூலம் கருமுட்டைகள் நிரந்தரமாக அழிந்து விடுகின்றன. அது மட்டுமில்லாமல், முன்கூட்டியே கருப்பை செயலிழக்கலாம், மாதவிடாயும் நின்று போகும் நிலை ஏற்படலாம். கருவுறாமைக்கு ஆளான ஒரு பெண்ணில் முன்னர் விவரிக்கப்பட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும், அதோடு இடுப்பு பகுதியில் வலி மற்றும்  மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஆகியவை இருந்தாலும் பிறப்புறுப்பு காசநோய்க்கான சோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.

    மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட கருப்பை திசுக்களை மறுபடியும் சீர் செய்து கொள்ளலாம். இருப்பினும், இந்த அறுவை சிகிச்சையின் முடிவுகள், டிபி நோயினால் தாக்குண்ட பகுதிகளில் உள்ள சேத அளவை பொறுத்து மாறுபடும். எல்லா வற்றையும் விட வருமுன் காப்பதே சிறந்த மருந்து. புதிதாக பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பு மருந்து போடுவதன் மூலம், அவர்கள் உடலில் இந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை.

    காசநோயினால் இனப்பெருக்க உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம். உங்களுக்கு காசநோய் இருந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உங்களுக்கு மறுபடியும் தாய்மை நிலை அடைய நிறைய வாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும் வந்து விட்டன.

    இருப்பினும், நோய் வந்த பின் அதற்கான சிகிச்சை எடுப்பதை விட, நோய் வருவதற்கு முன்னரே, மேல சொன்ன அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 
    Next Story
    ×