search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மார்பகப் புற்றுநோய்
    X
    மார்பகப் புற்றுநோய்

    பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

    தமிழக பெண்களின் அன்றாட உணவுப்பழக்கம், உடை பழக்கம், நவீன தொழிநுட்பத்தை கையாளும் விதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் வந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது? மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
    பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோயும் மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. உலக சுகாதார அமைப்புகள் இந்தியாவை எச்சரித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து இருப்பதை உலக சுகாதார நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
    தமிழ்நாட்டில் இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றம்தான் இதற்கு மிக முக்கியமான காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழக பெண்களின் அன்றாட உணவுப்பழக்கம், உடை பழக்கம், நவீன தொழிநுட்பத்தை கையாளும் விதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் வந்துவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது? மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாலைமலர் மருத்துவர் கமலிஸ்ரீபால் எளிய விளக்கம் அளித்துள்ளார். அது நவநாகரீக பெண்கள் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களாகும்.

    புற்று நோய் என்ற வார்த்தையை கேட்டாலே அஞ்சாத மக்கள் இல்லை. இது உலகெங்கிலும் பரவி உள்ள ஒரு அச்சம் தான். பரவலாக மக்களுக்கு தெரிந்த புற்றுநோய்கள் சில பிரிவுகள் தான். ஆனால் இதில் 100&க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.

    உடலில் செல்கள் வளர்கின்றது, பிரிகின்றது. வயது கூடும் பொழுது இறக்கின்றது, புதிய செல்கள் அங்கு செயல்படுகின்றது. இந்த செயல்முறை மாறுபடும் பொழுது செல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவு வளர்கின்றது இந்த வளர்ச்சி ஒரு கட்டியாக உருவாகலாம். ஆனால் சில வகை புற்று நோய்கள் கட்டிகளை உருவாக்குவதில்லை. அவை வேறு விதமானது. இங்கு நாம் குறிப்பிடுவது தீங்கு விளைவிக்கும், பரவும் வீரியம் கொண்ட புற்று நோய் கட்டிகளைப் பற்றியதே.
    இது உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். பொதுவில் பெண்களுக்கு மார்பக புற்று நோயும் ஆண்களுக்கு றிவீஷீsக்ஷீணீறீமீ புற்று நோயும் பரவலாக, அதிகமாக காணப்படுகின்றது. மார்பக புற்று நோயைப் பற்றி நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

    மார்பக புற்று நோய் : மார்பகங்களில் உள்ள செல்கலில் உருவாகும் நோய். பெண்களைத் தாக்கும் புற்றுநோய் அரிதாக ஆண்களையும் தாக்கும். ஒரு கணக்கெடுப்புப்படி அதாவது புள்ளி விவரப்படி ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் மார்பக புற்றுநோய் இருப்பதாக சோதனை மூலம் அறியப்படுவதாகவும், ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கொரு முறை ஒரு பெண் மார்பகபுற்று நோயால் இறப்பதாகவும் இந்தியாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

    * இந்தியாவில் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றது.

    * மார்பக புற்று நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பெண்கள் தங்களை மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்திக் கொள்வதில் காட்டும் கால தாமதமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

    * விழிப்புணர்வு உள்ள நகரங்களில் கூட வருடந்தோறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு கூடிக் கொண்டு தான் வருகின்றது.

    * தமிழகம் மார்பக புற்று நோய் பாதிப்பில் இந்தியாவில் 5&வது மாநிலமாக இருக்கின்றது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டோரிடையே கூடுதல் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * வலது மார்பகத்தினை விட இடது மார்பக புற்று நோய் தாக்குதல் கூடுதலாக இருக்கின்றது.

    * இந்த மார்பக புற்று நோய் மற்ற இடங்களுக்கு பரவுவதாலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டுகின்றது.

    * மார்பக கட்டியினை ஒருவர் உணரும் பொழுது அவருக்கு 2&3 வருடங்களுக்கு முன்பாகவே தாக்குதல் நிகழ்ந்திருக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
    * ஆரம்ப காலத்தில் கண்டு பிடித்து விட்டால் நல்ல சிகிச்சையின் மூலம் மிக கூடுதல் முன்னேற்றத்தினை பெற முடியும். ஆனால் இது அதிகமான மக்களுக்கு தெரிவதில்லை. காரணம் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ளும் செய்தியும், செய்து கொள்ளும் முறையும் தெரிவதில்லை.

    * 40 வயதினைக் கடந்தவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர்கள் மிகக் குறைந்த சதவிகிதமே உள்ளனர்.

    மார்பக புற்று நோய் காட்டும் அறிகுறிகள் :

    * மார்பகத்தில் ஏதோ ஒரு அசவுகரிய உணர்வு
    * மார்பகத்திலோ, கை உள் மடிப்பிலோ ஒரு கட்டி போன்ற உருவாக்கம்
    * மார்பகம், தடித்தோ, வீங்கியோ இருப்பது.
    * உள்வாங்கிய மார்பக சருமம்.
    * மார்பக சரும எரிச்சல்
    * உள் வாங்கிய மார்பக காம்பு
    * மார்பக காம்பில் வலி
    * காம்பின் மூலன் கசிவு, ரத்தக்கசிவு
    * மார்பக தோற்றத்தில் மாற்றம்
    * மார்பக வலி
    * சிவந்து வீங்கிய நிணநீர் சுரப்பிகள்.

    வேறு சில மாற்றங்களும் இருக்கலாம்.

    புதுகட்டி போன்ற கடின உருவாக்கம் வலியில்லாமல் கூட இருக்கலாம். அதனைத் தொடும் பொழுது முறையற்ற முரடான ஓரங்கள் கொண்டதாக இருக்கலாம்.
    மார்பக கட்டி என்றாலே புற்றுநோய் என்ற பயத்திலேயே பலர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. அனைத்து கட்டிகளும் புற்றுநோய் பிரிவினைச் சார்ந்ததாக இருப்பதில்லை. சாதாரண கட்டிகளாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    அதேபோன்று ஒருவரது மார்பகம் போல் மற்றொருவருடையது இருக்காது. மாதவிடாய் காலங்களில் மார்பக தோற்றம், உணர்வு இவற்றில் மாற்றம் இருக்கலாம். பிள்ளைபேறு காலத்திலும், எடை கூடும் பொழுதும், எடை குறையும் பொழுதும், சில மருந்துகளின் காரணமாகவும் மார்பகத்தில் மாற்றங்கள் இருக்கக்கூடும். வயது கூடுவதும் மார்பக தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    பெண்ணாக இருப்பதும், பெண்ணின் முதுமை கூடுவதும் இக்கடும் நோய் பாதிப்பிற்கு அடிப்படை காரணம். அடர்ந்த மார்பகம் உடையவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. பரம்பரையும் பாதிப்பிற்கு 5, 10 சதவீதம் வரை காரணம் ஆகின்றது. அம்மா, சித்தி, சகோதரி, அத்தை போன்ற உறவுகளில் பாதிப்பு இருப்பின் கவனம் தேவை.

    பொதுவில் 12 வயதிற்கு முன்பே பருவம் எய்துபவர்களுக்கும், 55 வயதிற்கு பின்னரே மாதவிடாய் நிற்பவர்களுக்கும் பாதிப்பின் வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கலாம். காரணம் இவர்களுக்கு நீண்ட கால மாதவிடாய், ஹார்மோன் ஆகியவை ஆகும். மிக இளம் வயதினருக்கு இப்பாதிப்பு அரிது தான். 45-50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது. எனவே இவர்கள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
    Next Story
    ×