search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள்
    X
    சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள்

    சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள்

    சுகப்பிரசவம் நடந்த பெண்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? போன்ற முக்கியமான விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
    அறுவை சிகிச்சை என்பதை விட சுகப்பிரசவம் நடந்த பெண்ணுக்கு தான் பணிவிடைகள் என்பது மிகவும் அவசியமாகிறது. அவள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? போன்றவை முக்கியமான விஷயங்களாக அவர்கள் வாழ்வில் அமைவது வழக்கம் தான். அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
    சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் எவை?

    சுகப்பிரசவம் கழித்து முதல் 6-லிருந்து 8 வாரங்கள் வரை உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கக்கூடும். அவை...

    1. குழந்தையை பெற்றதால் பிறப்புறுப்பு சுருக்கத்துடன் இருக்கும். சுகப்பிரசவம் கழித்து மெல்ல அது இயல்பு நிலைக்கு திரும்ப, வலியானது காணக்கூடும். உங்கள் பிறப்புறுப்பு இயல்பு நிலையை அடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம்.

    2. உங்களுடைய கழுத்து, தாடை, கை தசைகள் வேதனை அடையக்கூடும். காரணம், சுகப்பிரசவத்தின் போது வலியால் துடிக்கும் நீங்கள் கழுத்து, கை மற்றும் தாடைக்கு அதிக வேலைத்தந்து அசைப்பதாலே ஆகும்.

    3. முதல் 2 லிருந்து 4 வாரங்களுக்கு, பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வழியக்கூடும்.

    4. உங்கள் பிறப்புறுப்பில் அசவுகரிய நிலையை நீங்கள் உணர்வீர்கள்.

    5. உங்கள் கால் மற்றும் பாதங்கள் வீங்கி காணப்படலாம்.

    6. முதல் சில வாரங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்திடலாம்.

    நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

    சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த உங்கள் குழந்தைக்கு பணிவிடைகளை செய்ய ஆயத்தம் ஆகும் முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்திடுங்கள். அதற்கு இதோ உங்களுக்காக சில வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்.

    1. உங்கள் பிறப்புறுப்பை பாதுகாக்க அட்டை பயன்படுத்தும்போது ஐஸ் பேக் இடையே பயன்படுத்தலாம்.

    2. நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி வலியை குறைக்கலாம்.

    3. பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயுவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    4. நீங்கள் உட்காரும்போது தலையணை வைத்து அமர்வது வலியை குறைக்கும். 
    Next Story
    ×