என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்ப்பகாலத்தில் எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது
Byமாலை மலர்13 July 2019 3:35 AM GMT (Updated: 13 July 2019 3:35 AM GMT)
கர்ப்ப காலத்தில் எப்போதெல்லாம் பயணம் செய்யலாம், எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், குழந்தை வயிற்றில் இருக்கும்போது பயணம் செய்வது மிகவும் சிரமமான ஒன்று. நீங்கள் கர்ப்பகால பயணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவையும், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடாதவையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தாராளமாக முதல் மூன்று மாதங்கள் பயணம் செய்யலாம். ஆனால், வாந்தியும், களைப்பும் உங்கள் பயணத்தை மோசமானதாக மாற்றிவிடும். கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த மூன்று மாதங்கள் : கழிவறைக்கு உங்கள் வருகை குறைந்து வருவதால் பயணம் செய்ய இது ஒரு நல்ல நேரம். நீங்கள் குழந்தையை பம்ப் செய்து, அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆனால் நடைபயிற்சியின் போது கவனமாக இருக்க வேண்டும் ஒருவேளை நீங்கள் கீழே விழுந்தால் அது குழந்தைக்கு ஆபத்தாய் முடியும்.
கடைசி மூன்று மாதங்கள் : இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிபயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை சில முக்கியமான காரணங்களுக்காக பயணம் செய்ய நேர்ந்தால் நம்பத்தகுந்த மருத்துவர் உங்கள் அருகில் இருப்பது அவசியம்.
எப்போதெல்லாம் பயணம் செய்யலாம்
1. மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின் பயணம் செய்யலாம், உங்கள் பயண விவரங்ககளை முன்கூட்டியே அவரிடம் சொல்லி அவர்களின் ஆலோசனைபடி நடந்து கொள்ளவும்.
2. பயணம் செய்யும் வாகனம் மிகவும் முக்கியமானது. விமானம் மற்றும் கார் பயணங்கள் பேருந்து, ரயில் பயணங்களை விட பாதுகாப்பானது.
3. மருத்துவ வல்லுனரின் அறிவுரைப்படி நடக்கவேண்டும். அது மட்டுமின்றி சரியான பயண முகவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. செல்லக்கூடிய இடத்தில் நல்ல மருத்துவர்கள் உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
5. உங்களின் மருத்துவ காப்பீட்டை உறுதிசெய்வது நல்லது. ஏனெனில் கர்ப்பகால சிக்கல்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.
6. உங்களின் மருத்துவ குறிப்புகளின் ஒரு நகல் உங்களுடன் இருப்பது நல்லது. குறிப்பாக அதிக நாட்கள் தங்க நேரும்போது மருத்துவ குறிப்புகள் உடனிருத்தல் மிகவும் அவசியமாகும்.
எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது
1. இரத்தக்கசிவு இருக்கும்போது: இது ஒருவேளை கருசிதைவின் அறிகுறியாக இருக்கலாம்.
2. கடுமையான தலைவலி இருக்கும்போது: தலைவலி பம்ப்-ல் உள்ள பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
3. பார்வை குறைபாடு உள்ளபோது: தெளிவின்மை மற்றும் மங்கலான பார்வை உங்கள் பார்வை நரம்பு பாதிப்பை குறிக்கிறது.
4. வயிற்றில் வலி ஏற்படும்போது: நீங்கள் எங்கு பயணம் செய்வதாக இருந்தாலும் அதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமே அனைத்தையும்விட முக்கியம்.
நீங்கள் தாராளமாக முதல் மூன்று மாதங்கள் பயணம் செய்யலாம். ஆனால், வாந்தியும், களைப்பும் உங்கள் பயணத்தை மோசமானதாக மாற்றிவிடும். கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த மூன்று மாதங்கள் : கழிவறைக்கு உங்கள் வருகை குறைந்து வருவதால் பயணம் செய்ய இது ஒரு நல்ல நேரம். நீங்கள் குழந்தையை பம்ப் செய்து, அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆனால் நடைபயிற்சியின் போது கவனமாக இருக்க வேண்டும் ஒருவேளை நீங்கள் கீழே விழுந்தால் அது குழந்தைக்கு ஆபத்தாய் முடியும்.
கடைசி மூன்று மாதங்கள் : இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிபயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை சில முக்கியமான காரணங்களுக்காக பயணம் செய்ய நேர்ந்தால் நம்பத்தகுந்த மருத்துவர் உங்கள் அருகில் இருப்பது அவசியம்.
எப்போதெல்லாம் பயணம் செய்யலாம்
1. மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின் பயணம் செய்யலாம், உங்கள் பயண விவரங்ககளை முன்கூட்டியே அவரிடம் சொல்லி அவர்களின் ஆலோசனைபடி நடந்து கொள்ளவும்.
2. பயணம் செய்யும் வாகனம் மிகவும் முக்கியமானது. விமானம் மற்றும் கார் பயணங்கள் பேருந்து, ரயில் பயணங்களை விட பாதுகாப்பானது.
3. மருத்துவ வல்லுனரின் அறிவுரைப்படி நடக்கவேண்டும். அது மட்டுமின்றி சரியான பயண முகவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. செல்லக்கூடிய இடத்தில் நல்ல மருத்துவர்கள் உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
5. உங்களின் மருத்துவ காப்பீட்டை உறுதிசெய்வது நல்லது. ஏனெனில் கர்ப்பகால சிக்கல்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.
6. உங்களின் மருத்துவ குறிப்புகளின் ஒரு நகல் உங்களுடன் இருப்பது நல்லது. குறிப்பாக அதிக நாட்கள் தங்க நேரும்போது மருத்துவ குறிப்புகள் உடனிருத்தல் மிகவும் அவசியமாகும்.
எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது
1. இரத்தக்கசிவு இருக்கும்போது: இது ஒருவேளை கருசிதைவின் அறிகுறியாக இருக்கலாம்.
2. கடுமையான தலைவலி இருக்கும்போது: தலைவலி பம்ப்-ல் உள்ள பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
3. பார்வை குறைபாடு உள்ளபோது: தெளிவின்மை மற்றும் மங்கலான பார்வை உங்கள் பார்வை நரம்பு பாதிப்பை குறிக்கிறது.
4. வயிற்றில் வலி ஏற்படும்போது: நீங்கள் எங்கு பயணம் செய்வதாக இருந்தாலும் அதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமே அனைத்தையும்விட முக்கியம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X