என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள்
Byமாலை மலர்14 Oct 2017 6:40 AM GMT (Updated: 14 Oct 2017 6:40 AM GMT)
கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது.
கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது.
மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..
கட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம்.
ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம்.
கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.
கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.
கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.
கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.
மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..
கட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம்.
ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம்.
கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.
கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.
கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.
நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.
கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X