என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்சு எரிச்சல்
Byமாலை மலர்8 Jun 2017 6:43 AM GMT (Updated: 8 Jun 2017 6:44 AM GMT)
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
’பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும். அமிலம், காரம் நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், செரிமானத்துக்கு சிரமமானவை, கோலா பானங்கள், செயற்கை பழரச பானங்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. அரைமணி நேரம் கழித்து 45 டிகிரி சாய்மானத்தில் இருந்துவிட்டு உறங்கச் செல்லலாம். உறங்கும்போது இடதுபக்கம் சாய்ந்து உறங்குவது உணவுக்குழாயில் உள்ள உணவும் அமிலங்களும் உதரவிதானம் கடந்து வருவதைத் தடுக்கும். மேலும் இப்படி உறங்குவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்லது.
உறங்கும்போது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையும், வயிற்றின் அடிப்புறம் ஒரு தலையணையும் வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு என சிறப்பான தலையணைகள், படுக்கைகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால் நீங்களாக சுயவைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.’
’பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும். அமிலம், காரம் நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், செரிமானத்துக்கு சிரமமானவை, கோலா பானங்கள், செயற்கை பழரச பானங்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. அரைமணி நேரம் கழித்து 45 டிகிரி சாய்மானத்தில் இருந்துவிட்டு உறங்கச் செல்லலாம். உறங்கும்போது இடதுபக்கம் சாய்ந்து உறங்குவது உணவுக்குழாயில் உள்ள உணவும் அமிலங்களும் உதரவிதானம் கடந்து வருவதைத் தடுக்கும். மேலும் இப்படி உறங்குவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்லது.
உறங்கும்போது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையும், வயிற்றின் அடிப்புறம் ஒரு தலையணையும் வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு என சிறப்பான தலையணைகள், படுக்கைகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால் நீங்களாக சுயவைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.’
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X