search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மலபார் மட்டன் குருமா
    X
    மலபார் மட்டன் குருமா

    மலபார் மட்டன் குருமா

    பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மலபார் மட்டன் குருமா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1/2 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 5 இரண்டாக நறுக்கியது
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லி தூள் - 1 ஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க வேண்டியது:

    தேங்காய் - அரை கப்
    முந்திரி - 10
    சோம்பு - 1 சின்ன ஸ்பூன்
    பட்டை, கிராம்பு - கொஞ்சம்

    அம்மியில் இடிக்க வேண்டியது:

    இஞ்சி - 50 கிராம்
    பூண்டு - 50 கிராம்

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கொஞ்சம் பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கி, வேக வைத்த மட்டன் போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது போட்டு, உப்பு சரி பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றி சரியாக 10 நிமிடம் மட்டும் வைக்கவும்.

    கடைசியாக வதக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேருங்கள்.

    கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி குருமாவின் மேல் ஊற்றி 2 நிமிடம் மூட்டி வைக்கவும்.

    சுவையான மலபார் மட்டன் குருமா தயார்
    Next Story
    ×