என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
இன்று மக்ரோனி சூப் செய்யலாம் வாங்க...
Byமாலை மலர்18 Jan 2022 9:31 AM GMT (Updated: 18 Jan 2022 9:31 AM GMT)
குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத் தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பட்டாணி, மக்ரோனியை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள்.
வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வேக வையுங்கள்.
இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்ததை மீண்டும் முதலில் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இறக்கிய சூப்பில், வேக பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.
சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத் தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பட்டாணி, மக்ரோனியை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள்.
வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வேக வையுங்கள்.
இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்ததை மீண்டும் முதலில் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இறக்கிய சூப்பில், வேக பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X