search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
    X
    வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி

    வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி

    வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டியை சப்பாத்தி, நாண், தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறவும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - 6
    ப.மிளகாய் - 2
    இஞ்சி -1 துண்டு
    பூண்டு - 6 பல்
    முந்திரி - 100 கிராம்
    பிரிஞ்சி இலை - 1
    காலிஃப்ளவர் - 1
    கேரட் - 2
    பீன்ஸ் - 4
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    எண்ணெய்/ நெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஓமம் - கால் டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    பட்டை - 1
    வெங்காயம்  - 3
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    ப்ரஷ் கிரீம் - 4 டேபிள் ஸ்பூன்
    கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய்,  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் 3 நறுக்க்கிய தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,  10 முந்திரி, பிரிஞ்சி இலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக மசியும் வரை  வேக வைக்கவும்.

    அடுத்து அந்த கலவையை ஆறவைத்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு வேறொரு வாணலியில் தண்ணீர், சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சோத்து நன்றாக கொதிக்க விடவும். அதில் நறுக்கி காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்பு அதனுடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வேக வைக்கவும்.

    மீதமுள்ள முந்திரியை தனியாக வேக வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், ஓமம், ஏலக்காய், சிறிய துண்டு பட்டை போன்றவற்றை சேர்க்கவும்.

    அவை நன்கு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், சேர்த்து பொன்னிறாமாக வதக்கவும்.

    அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்பு மீதமுள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

    அதனுடன் வேகவைத்த காய்கள், அரைத்து வைத்த முந்திரி விழுது, தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.

    பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் ஃபிரெஷ் க்ரீம், கஸ்தூரி மேத்தி, தேவையான அளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    இதை சூடான சப்பாத்தி பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறவும்.
    Next Story
    ×