search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    திருவாதிரைக் களி
    X
    திருவாதிரைக் களி

    திருவாதிரைக் களி செய்வது எப்படி?

    திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி -  1 கப்
    பாசிப் பருப்பு -  கால் கப்
    தேங்காய் - ¼ மூடி (சிறியது)
    மண்டை வெல்லம் - 1½ கப்
    தண்ணீர் - 2½ கப்
    சுக்கு - சிறிதளவு
    ஏலக்காய் - 1
    நெய் - 2 ஸ்பூன்
    முந்திரிப் பருப்பு - 10

    செய்முறை

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பினை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து, ஆற விடவும்.

    ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை பெரிய ஓட்டை உள்ள சலிப்பில் போட்டு சலித்து கொள்ளவும்.

    சலித்தது போக மேலே உள்ளவற்றை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலிக்கவும். இவ்வாறு எல்லாவற்றையும் ஒரே பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

    மண்டை வெல்லத்தை 2½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் சுக்கை பொடியாக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் கரைத்து வடிகட்டிய சர்க்கரைக் கரைசலை ஊற்றி மிதான தீயில் வைத்து சூடேற்றவும். பாகு சூடாகி ஆவி வந்ததும் துருவிய தேங்காயை சேர்க்கவும்.

    சர்க்கரைக் கரைசல் நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து சலித்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும்.

    பின்னர் அதனுடன் தட்டிய சுக்கு, ஏலக்காயை சேர்த்துக் கிளறவும்.

    இரண்டு நிமிடங்களில் கலவை கெட்டியாகி விடும். கலவை நன்கு திரண்டு வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

    மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரியை போட்டு வறுத்து அதனை களியில் சேர்த்து ஒரு சேரக் கிளறி இறக்கவும்.

    இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.

    Next Story
    ×