என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம்
Byமாலை மலர்15 March 2021 9:25 AM GMT (Updated: 15 March 2021 9:25 AM GMT)
சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நெல்லை மடக்கு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - 4 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.
கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.
இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.
அரிசி மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - 4 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.
கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.
இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.
வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X