search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம்
    X
    நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம்

    நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம்

    சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நெல்லை மடக்கு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்
    முட்டை - 2
    சர்க்கரை - 4 டீஸ்பூன்
    நெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் பால் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

    அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.

    கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.

    இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.

    வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×