search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி
    X
    தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

    தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

    குழந்தைகளுக்கு வெரைட்டியாக செய்து கொடுக்க விரும்பினால் தேங்காய்ப்பால், உருளைக்கிழங்கு சேர்த்து பிரியாணி செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்,
    வெங்காயம் - 2,
    சின்ன உருளைக்கிழங்கு - 1 கப்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3,
    பட்டை - ஒரு துண்டு,
    ஏலக்காய், கிராம்பு - தலா 1,
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

    செய்முறை

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

    பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும்.

    மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×