என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பச்சைப் பட்டாணி போண்டா
Byமாலை மலர்26 March 2020 9:30 AM GMT (Updated: 26 March 2020 9:30 AM GMT)
மாலை நேரத்தில் குழந்தைகள் சாப்பிட அருமையான, சத்தான ஸ்நாக்ஸ் இந்த பச்சைப் பட்டாணி போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா சிறிதளவு - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா சிறிதளவு - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X