search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருணைக்கிழங்கு வடை
    X
    கருணைக்கிழங்கு வடை

    மாலை நேர ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு வடை

    உளுந்து, பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த வடை சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - 150 கிராம்,
    கருணைக்கிழங்கு - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    பட்டை, சோம்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.

    கருணைக்கிழங்கு வடை

    செய்முறை:  

    கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.

    இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×