என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு வடை
Byமாலை மலர்25 March 2020 9:26 AM GMT (Updated: 25 March 2020 9:26 AM GMT)
உளுந்து, பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த வடை சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை - 150 கிராம்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
பட்டை, சோம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொட்டுக்கடலை - 150 கிராம்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
பட்டை, சோம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X