என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் புலாவ்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் புலாவ்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,
    வெங்காயம் -  ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் தலா - 2,
    பிரியாணி இலை - ஒன்று,
    பச்சை மிளகாய் - 4,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

     பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.

    கலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    சுவையான பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×