என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த கடலை மாவு போண்டா சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - 1 கப்,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோடா மாவு - ஒரு சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :



    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு அகலமான பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், சோடா மாவு, மிளகாய் துள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கட்டியான மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவை சேர்த்து கொள்ளலாம்.

    * கடாயில் எண்ணெயை சூடானதும் கடலை மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான போண்டாவை சூடாக பரிமாறவும். இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    சுட்டீஸ்களுக்கான சத்தான உணவுகளில் எள்ளு உருண்டை மிகவும் எனர்ஜி தரக்கூடியது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எள்ளு - 200 கிராம்,
    வெல்லம் - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    நெய் - 3 டீஸ்பூன்.

    செய்முறை:

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    * வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்).

    * பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும்.

    * சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி.

    குறிப்பு: வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதை கருப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.
    குழந்தைகளுக்கு இட்லி சாப்பிட அடம் பிடிப்பார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 12
    தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    கொத்தமல்லி - 2 கொத்து
    சில்லி சிக்கன் மசாலா - 1 மேசைக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    குடமிளகாய் - 1
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    * இட்லியை வேக வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    * கொத்தமல்லி, வெங்காயத்தாள், குடமிளகாயை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்.

    * அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை போட்டு வதக்கவும்.

    * அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர், தக்காளி சாஸ், சோயா சாஸ், கரம்மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.

    * பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.

    * இப்போது பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.



    * சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும். மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கவும்.

    * சுவையான சில்லி இட்லி ரெடி.

    * இட்லியை பொரிக்காமல், வேக வைத்த இட்லியை போட்டும் செய்யலாம்.

    * இட்லி மீந்து விட்டால் இப்படி செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீனை விட இறால் மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த இறால் உருளைக்கிழங்கு ஃபிரை மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    உருளை கிழங்கு - 2 பெரியது
    மிளகாய் தூள்  -  தேவையான அளவு
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊறவிடவும்

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

    * இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

    * இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஐஸ்க்ரீம் சாப்பிட வெளியில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே எளிய முறையில் ஐஸ்க்ரீம் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்ட்ராபெர்ரி - 1 கப்,
    பால் - 1/4 கப்,
    கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,
    ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,
    லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/4 கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் - 1 ஸ்பூன்

    செய்முறை :


    * பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.. அரை லிட்டர் பாலை கால் லிட்டராக சுண்ட வைக்க வேண்டும்.

    * 3 ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி வைக்கவும். மீதியுள்ளதை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும்.

    * பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை, உப்பு, ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ், அரைத்த ஸ்ட்ராபெர்ரி விழுது, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அதை ஃப்ரிஜ்ஜில் 1 மணி நேரம் வைத்திருந்த பின் எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். பிறகு மீண்டும் இதை 7-8 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

    * அதன் பின் எடுத்து பரிமாறவும்.

    * குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் ரெடி

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ
    சிறிய வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    தேங்காய் பால் - அரை டம்ளர்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1 சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    புளி - எலுமிச்சை அளவு

    செய்முறை :

    * மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * புளியை கரைத்து வைக்கவும்.

    * இஞ்சியை விழுதாக அரைக்கவும்.



    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.



    * தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.



    * அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.



    * மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.



    * நெத்திலி மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக மீனை குழம்பு, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மீனை வறுத்து, பின் மசாலா செய்வது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பொரிப்பதற்கு...

    வஞ்சிரம் மீன் - 300 கிராம்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    ஓமம் தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    மசாலாவிற்கு...

    வெங்காயம் - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை  :

    * கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து அதில் கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியம் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போன வதக்கிய பின்னர் தக்காளியை நன்றாக வதக்கவும்.

    * பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * மசாலா நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.

    * பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை மிதமாக வைத்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * அருமையான வறுத்த ஸ்பைசி மீன் மசாலா ரெடி!!!

    * இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் பிடித்தமான சுவையான மஷ்ரூம் பெப்பர் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி
    சிவப்பு குடை மிளகாய் - 1
    பச்சை குடை மிளகாய் - 1
    காளான் - 200 கிராம்
    வெங்காயம் - 1 சிறியது
    முட்டை - 3
    மிளகு தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * குடைமிளகாய், காளான், வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்..

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், காளான் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் கலர் மாறக்கூடாது.

    * 5 நிமிடம் வதங்கியவுடன் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி காய்கள் மீது முழுவதுமாக பரவும் படி நன்றாக பரப்பி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

    * 2 நிமிடம் ஆனவுடன் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    * சத்தான இந்த ஆம்லெட்டில் குறைந்த கலோரி உள்ளது. டயட்டில் உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    சேமியா - அரை கிலோ
    எண்ணெய் - 100 மில்லி
    நெய் - 50 மில்லி
    இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
    தயிர் - 4 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு
    எலுமிச்சைபழம் - பாதி
    தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.

    * மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
     
    * தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.

    * பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

    * சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.

    * மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
    மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)

    * பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.

    * சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

    * நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.

    * பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    * ரம்ஜான் ஸ்பெஷல் சேமியா மட்டன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் இளநீர் கடல் பாசியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடல் பாசி - 10 கிராம்
    தண்ணீர் - இரண்டு கப்
    இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை கப்



    சர்க்கரை - தேவையான அளவு
    இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய் - சிறிதளவு
    பாதா‌ம் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து தேவைப்ப‌ட்டால்)

    செய்முறை :

    * ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொண்டே கொதிக்க விடவும்.

    * நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    * இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.



    * சதுரமாக உள்ள பாத்திரத்தில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து கலந்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும்.

    * அடுத்து அதன் மேல் பாதாமை தூவவும்.

    * சூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். அப்போது அந்த பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைக்கவும்.

    * கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - முக்கால் கிலோ
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 4
    பிரியாணி இலை - 4
    பட்டை - 1
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    ஊற வைப்பதற்கு...


    தயிர் - 1 கப்
    வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
    எள் - 2 டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 4 பற்கள்

    செய்முறை:

    * சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

    * மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * 3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

    * பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

    * அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    * சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.

    * சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் - முக்கால் டம்ளர்
    பாசிப்பருப்பு - இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
    வெங்காயம் - ஒன்று பெரியது
    தக்காளி - ஒன்று
    தயிர் - ஒரு மேசை கரண்டி
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
    கேரட் - அரை துண்டு
    ப.மிளகாய் - ஒன்று
    மிளகாய் தூள் - அரை தேக்காண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    நெய் - 3 தேக்கரண்டி
    தேங்காய் - இரண்டு பத்தை
    பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
    வெந்தயம் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லி தழை - சிறிது
    புதினா - சிறிது

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.

    * புதினா, கொத்துமல்லி, ப.மிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை இல்லாமல் வடித்து வைக்க வேண்டும்.

    * கேரட்டை துருவி வைக்க வேண்டும்.

    * அரிசி, பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

    * குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.

    * வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
    * அடுத்து அதில் தக்காளி ப.மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

    * தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

    * தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும், பருப்பையும் தண்ணீரை வடித்து போட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து 5 விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவேண்டும்.

    * ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவை இறக்கி பரிமாறவும்.

    * சுவையான மட்டன் கீமா நோன்பு கஞ்சி தயார்.

    குறிப்பு :

    குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோடு அப்படியே குக்கரில் வைக்க கூடாது. செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    ×