என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ரம்ஜான் ஸ்பெஷல்: சேமியா மட்டன் பிரியாணி
    X

    ரம்ஜான் ஸ்பெஷல்: சேமியா மட்டன் பிரியாணி

    ரம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    சேமியா - அரை கிலோ
    எண்ணெய் - 100 மில்லி
    நெய் - 50 மில்லி
    இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
    தயிர் - 4 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு
    எலுமிச்சைபழம் - பாதி
    தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.

    * மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
     
    * தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.

    * பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

    * சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.

    * மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
    மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)

    * பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.

    * சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

    * நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.

    * பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    * ரம்ஜான் ஸ்பெஷல் சேமியா மட்டன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×