என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்
Byமாலை மலர்4 Aug 2021 5:21 AM GMT (Updated: 4 Aug 2021 5:21 AM GMT)
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
ப்ரோக்கோலி - பாதியளவு
தக்காளி - 1
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 3 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 9
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ப்ரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.
கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
ப்ரோக்கோலி - பாதியளவு
தக்காளி - 1
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 3 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 9
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ப்ரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.
கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X