search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அரிசி உப்புமா
    X
    அரிசி உப்புமா

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான அரிசி உப்புமா

    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த அரிசி உப்புமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 1/4 கப்
    மிளகு - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - 2 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    காய்ந்த மிளகாய்,
    உளுத்தம் பருப்பு,
    கடலைப் பருப்பு,
    பெருங்காயம்,
    கறிவேப்பிலை.

    செய்முறை :

    அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

    மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.

    8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.

    அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.

    சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.

    அரிசி உப்புமாவிற்குக் தொட்டு கொள்ள காரச்சட்னி அருமையான இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×