
வாழைப்பூ - 1
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
பச்சை பயறு - 100 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு
பெருங்காய பொடி - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுத்தம் பருப்பு, பச்சைபயறு, அரிசி போன்றவைகளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள்.
பின்பு அத்துடன் காய்ந்த மிளகாயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
நறுக்கிய வாழைப்பூவை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்திடுங்கள்.
அத்துடன் உப்பு, பெருங்காய பொடி கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.