என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ
Byமாலை மலர்23 Sep 2020 4:49 AM GMT (Updated: 23 Sep 2020 4:49 AM GMT)
இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
தண்ணீர் - 250 மில்லி
பட்டை - ஒரு துண்டு
மிளகு - 10
மஞ்சள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை:
250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அதன் பின் எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து தண்ணீரில் போடுங்கள்.
அதன்பின் சிறிதளவு பட்டையை இந்த தண்ணீரில் பொடித்து போடுங்கள்.
இவற்றை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.
அதன் பின் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடுங்கள்.
இந்த மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து நீங்கள் இந்த டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.
அதன்பின் கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி விட்டு பத்து நிமிடம் களித்து இந்த தண்ணீரை அருந்துங்கள்.
இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.
தண்ணீர் - 250 மில்லி
பட்டை - ஒரு துண்டு
மிளகு - 10
மஞ்சள் - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை:
250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அதன் பின் எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து தண்ணீரில் போடுங்கள்.
அதன்பின் சிறிதளவு பட்டையை இந்த தண்ணீரில் பொடித்து போடுங்கள்.
இவற்றை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.
அதன் பின் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடுங்கள்.
இந்த மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து நீங்கள் இந்த டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.
அதன்பின் கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி விட்டு பத்து நிமிடம் களித்து இந்த தண்ணீரை அருந்துங்கள்.
இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.
அதுமட்டுமல்லாமல் இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். இதனை பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் இதனை குடிக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X